கோகிலா மகேந்திரன்

கோகிலா மகேந்திரன்

யாழ். தெல்லிப்பழை, விழிசிட்டி என்னும் இடத்தைச் சேர்ந்த கோகிலா மகேந்திரன் அவர்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமின்றி கல்வியாளர், உளவியலாளர், கவிஞர், நாடகக் கலைஞர், என பன்முகத்திறமை படைத்தவர்.

பெண்ணியம் பற்றிய கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பெண்ணியக் கருத்துக்களை தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்தியவர்.

இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பல விடயங்களை எழுதியுள்ளார். 1972இல் குயில் எனும் சஞ்சிகையில் வெளியான ‘அன்பிற்கு முன்னால்’ எனும் கதையே இவர் எழுதிய முதல் சிறுகதை ஆகும்.

1988/89களில் வெளி வந்த உள்ளம் இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

  • யாழ். தெல்லிப்பழை, விழிசிட்டி
  • Female
  • 0

No products were found matching your selection.