கருணாகரன்

கருணாகரன்

கருணாகரன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சி எனும் கிராமத்தில் பிறந்தவர். 1980களின் முற்பகுதியில் இருந்து கவிதை, சிறுகதை, இலக்கியம்,அரசியல்,சமூகவியல்துறைகளில் விமர்சனம் எனப் பல தளங்களில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

88,89 களில் வெளிவந்த உள்ளம் இதழ்களிலும் இவரது கவிதைகள் பல வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு இதழ் வெளிவந்த பின்னரும் அவற்றை வாசித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் இவரும் ஒருவர்.

அத்துடன், சுயாதீன ஊடகவியலாளராக இருந்து சாதாரண மக்களையும் துறை சார்ந்த ஆளுமைகளையும் பல நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். மகிழ் எனும் பதிப்பகத்தின் ஊடாக நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

  • கிளிநொச்சி மாவட்டத்தில்லுள்ள இயக்கச்சி
  • Male
  • 0

No products were found matching your selection.