ஆறுமுகம் சடகோபன்

ஆறுமுகம் சடகோபன்

ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர். உள்ளம், தினக்குரல், மூன்றாவது மனிதன், சரிநிகர், உதயன்-சூரியகாந்தி, தாயகம், இருக்கிறம் என பத்திரிகைகள் பல சஞ்சிகைகளில் சடாவதனன், சடா, சடாகோபன், பனையடிப்பாடகன், நிலாக்கீற்றன் என்ற பெயர்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ‘மண்ணில் தொலைந்த மனது தேடி…'(2004) என்ற கவிதைத் தொகுப்பும் ‘நிலாக்கீற்று'(2004) என்ற இறுவட்டும் இவரின் படைப்புகளே.

சோ. ப. அவர்களால் 2014ல் வெளியிடப்பட்ட Srilankan Tamil Poetry : An Anthology என்ற மொழிபெயர்ப்பு நூலில் சடாகோபனின் நான்கு கவிதைகள் இடம் பெற்றன. முப்பதுக்கு மேற்பட்ட கவிஞர்களின், தெரிவு செய்யப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு இந்நூல்.

சடாவின் கவிதைகளில் மண்ணின்மணமும் மனிதமும் எப்போதும் இழையோடும். வளர்மதி முன்னேற்றக்கழகப் பணிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருப்பவர். இவரது கவிதைகள் முன்னர் வந்த உள்ளத்தின் இதழ்களை மெருகேற்றின. இனிவரும் ‘உள்ளம்’ இதழ்கள் சடாவின் கவிதைகளால் கனதி பெறும்.

  • Male
  • 0

No products were found matching your selection.