அல் அஸுமத்

அல் அஸுமத்

அல் அஸுமத் அவர்கள் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்தவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். தமிழறிவாளரான இவர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக ‘கவிதைச்சரம்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தவர்.

குரல்வழிக் கவிதைகள், வெள்ளை மரம், புலராப்பொழுதுகள், அறுவடைக்கனவுகள் போன்ற இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளதோடு, ‘முகில்’ எனும் கலை இலக்கிய இதழாசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

89 களில் உள்ளம் சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு – காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்ஸாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடாத்திய 13ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘தமிழ்மாமணி’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட மூன்று இலங்கையர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Male
  • 0

No products were found matching your selection.